பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குளிர்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம் - 6வன சரகங்களில் 13 க்கும் மேற்பட்ட தன்னார்வாளர்கள் பங்கேற்பு.


பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, சிங்கவால் குரங்கு என மாமிச உண்ணி, தாவர உண்ணி விலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் விலங்கு இடம் பெயர்ந்துள்ளாதா? அதிகரித்து உள்ளாதா? என ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது .

 

அதன்படி இந்தாண்டுக்கான குளிர் கால வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலரந்தி, வால்பாறை, மானாம்பள்ளி , உடுமலை, அமராவதி ஆகிய 6 வனசரகங்களில் 124 நேர்கோட்டு பாதையில் 130 க்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்கள் தன்னாவாளர்கள் மற்றும் வன ஊழியர்கள் கலந்துக் கொண்டு கணக்கெடுக்கும் பணியில் நேற்று  காலை 6 மணி முதல் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி வனசரக பகுதியில் வனசரகர் ரவிசந்திரன் தலைமையில் போத்தமடை, சேத்துமடை, ஆழியார் வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 6 நாட்கள் நடைபெறும் கணக்கெடுக்கும் பணியில் முதல் 3 நாட்களுக்கு மாமிச உண்ணிகளும், அடுத்த 3 நாட்களுக்கு தாவர உண்ணிகளுக்கான கணக்கெடுப்பு நடத்தபடுகிறது. கணக்கெடுப்பின் போது நேர்கோட்டில் உள்ள வன விலங்குகளின் ஜிபிஎஸ் கருவிகள் கொண்டு விலங்கு களின் கால்தடம், எச்சம், நக கீறல்கல் உள்ளிட்டவை மூலம் கணக்கெடுக்கபடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இந்த வனப்பகுதியில் உள்ள பினம் தின்னி கழுகுகளும் இதில் கணக்கெடுக்கபடுகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லததால் வனப்பகுதியில் தண்ணீர் பற்றக்குறை காரணமாக  பல வனவிலங்குகள் இடம் பெயர்ந்துள்ள காரணத்தால் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் விலங்குகள் தென்படாததால்  ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...