உக்கடம் பெரிய குளத்தில் மீண்டும் மீண்டும் பரவும் ஆகாயத் தாமரைகள்!

கோவை, உக்கடம் பெரிய குளத்தில் ஆகாயத் தாமரையை பலமுறை கோவை மாநகராட்சி சார்பில் தூர்வாரப்பட்டும், மீண்டும் மீண்டும் ஆகாயத் தாமரை பரவி வருகிறது.



இது குறித்து கோவையை சேர்ந்த தன்னார்வலர் ஓசை சையது கூறுகையில்:

'கோவையில் உள்ள பெரும்பாலான குளங்களில் ஆகாயத் தாமரை பரவி வருகிறது. இதற்கு கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வருகின்றனர். பொதுவாக குளங்களில் கலக்கப்படும் கழிவு நீர்களால் ஆகாயத்தாமரை பரவி வருகிறது. உக்கடம் பெரிய குளத்தில் கலக்கப்படும் கழிவு நீரும் இதற்கு காரணம். கழிவு நீர் கலக்கப்படாமல் இருந்தால் ஆகாயத்தாமரை வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. கோவையில் இந்த வருடம் பருவ மழை இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். மேலும் உக்கடம் பெரிய குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்படவுள்ளது, இதன்மூலம் குளத்தில் கலக்கப்படும் கழிவு நீரானது சுத்திகரிக்கப்பட்ட பின்னரே குளத்திற்கு விடப்படும். அதன்பின் குளங்களில் ஆகாயத்தாமரை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது'.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...