ஆதார் உள்ளிட்ட அரசு திட்டங்களை பெற கிராம மக்களுக்கு உதவிசெய்த அவினாசிலிங்கம் பல்கலைக் கழக மாணவிகள்


கோவை மாவட்டம், அவினாசிலிங்கம் பல்கலைக் கழக என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி மாணவிகள் சார்பில் கிராமப்புற மக்களுக்கு மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஆதார் உள்ளிட்ட அட்டைகளை பெற்றுத்தர திட்டமிடப்பட்டது. 



அதனடிப்படையில், அவினாசிலிங்க பல்கலையின் என்.எஸ்.எஸ், என்.சி.சி மாணவிகள் சுமார் 3500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தெற்குபாளையம், ரங்கம்மாள் காலனி, சுப்ரமணியாம்பாளையம், தொண்டாமுத்தூர், குருடம்பாளையம் பஞ்சாயத்து, வடமதுரை, தொப்பம்பட்டி, கஸ்தூரிநாயக்கன்பாளையம், கலப்பநாயக்கன்பாளையம், சோமயம்பாளையம், நல்லாம்பாளையம் II, தென்னம்பாளையம், புதுபாளையம், நல்லாம்பாளையம் காந்தி நகர், கெம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்களிடம் தகவல்களை பெற்று அதனை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த உதவியின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை கிராம மக்களும் பெற்று பயனடைய முடியும் என அப்பகுதி மக்கள் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



இந்நிகழ்வில், அவினாசிலிங்கம் பல்கலையின் துணை வேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் எஸ்.கௌசல்யா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாணவிகள் கிராம மக்களிடம் பெயர், வயது, வருமானம், பான் அட்டை விபரம் உள்ளிட்ட பல தகவல்களை சேகரித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...