ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் 31-வது விளக்கேற்றும் விழா கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி, தனது 31வது விளக்கேற்றும் விழாவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்ரீமதி.வேலுமணியம்மாள் நினைவரங்கத்தில் கொண்டாடியது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் மருத்துவர் டி.நிர்மலா, வரவேற்புரையாற்றி துவக்கிவைத்தார். 

கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரி முதல்வர் மருத்தவர் எஸ்.மாதவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் துணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ.து.லக்ஷ்மிநாராயணஸ்வாமி இவ்விழாவிற்கு தலைமை வகித்தார்.



இதைத்தொடர்ந்து, முதலாம் ஆண்டு செவிலியர் மாணவர்கள் அகல் விளக்கேற்றி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் காட்டிய வழியை பின்பற்ற உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து, கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியை எஸ்.கிரிஜாகுமாரி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். துணைபேராசிரியை வி.பிருந்தா நன்றியுரையுடன் விழாவினை நிறைவுசெய்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...