விபத்தில் இறந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்றம்


கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (22). அப்பகுதியிலேயே இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதியன்று பேரூரில் இருந்து மாதம்பட்டியை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து இவர்  மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பெஞ்சமின் பலியானார். 

இதுகுறித்து பேரூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். மேலும், விபத்தில் இறந்த பெஞ்சமீனின் மனைவி கவிதா இழப்பீடு கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் 6.57 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கச்சொல்லி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு நீதிபதி ஆணையிட்டார். இதனை செயல்படுத்த அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகிகள் தவறியதால் காந்திபுரத்தில் இருந்து ஒண்டிப்புதூர் வரை செல்லக்கூடிய 140டி பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...