சசிகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய சிபிசிஐடி பொது ஆய்வாளர் அதிகாரிகளுக்கு அறிவுரை

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டுமென சிபிசிஐடி பொது ஆய்வாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால், காவல் துறையினர் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் கொலை நடந்த நாளான்று பதிவான சிசிடிவி காட்சி பதிவுகள் மற்றும் சசிகுமாரின் செல்போன் பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். 

இதைத்தொடர்ந்து, சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் உத்தேச வரைபடங்கள் வெளியிட்ட போதும், எந்தவித துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி காவல் துறையினர் திணறி வருகின்றனர். 

இந்நிலையில் சசிகுமார் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக சிபிசிஐடி காவல் துறை பொது ஆய்வாளர் மகேஷ்குமார் அகர்வால் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசணை மேற்கொண்டார். 

அப்போது இதுவரை வழக்கு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கிடைத்துள்ள தடயங்கள், வழக்கின் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழக்கை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கிய அவர், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...