மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திட்டம்


மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட 9 கிராமங்களில் ரூ.30 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தை நேஷனல் ருர்பன் மிஷன் (NRUM) திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து, மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தின் 9 கிராம ஊராட்சிகளையும் நகர பகுதிகளுக்கு இணையாக உயர்த்திடும் வகையில் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

இத்திட்டம் செயல்படுத்த கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும் திட்ட இயக்குநரை துணை தலைவராகவும் பல்துறை அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்டும் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான நேஷனல் ருர்பன் மிஷன் கூட்டத்தில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள் அவற்றின் நன்மைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு பின்னர் பணிகள் மேற்கொள்ள ரூ.30 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளையும் வளர்ச்சியடைந்த நகர பகுதிகளுக்கு இணையான முன்னேற்றமடைந்த பகுதிகளாக மாற்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கருப்பையா, (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...