கோவை ரயில் நிலையத்தில் கூடுதல் பணமில்லா பரிவர்த்தனை கருவிகள் அறிமுகம்


ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பினை தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கோவை ரயில் நிலையத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்காக முன்பதிவு மையத்தில் 3 புதிய கருவிகள் மூலம் பண பரிமாற்றம் செய்யும் சேவை துவங்கப்பட்டுள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைந்து சில்லரை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக ரயில்நிலையங்களில் பயணச்சீட்டு எடுப்பதில் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வந்த நிலையில் கோவை ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச்சீட்டு பெறும் மையத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்காக புதிய கருவிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள கடன் அட்டைகளை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறுவதற்காக ஒரு இயந்திரம் செயல்பட்டு வந்த சூழலில் தற்போது மேலும் இரண்டு கருவிகள் மூலம் ரயில்வே நிர்வாகம் சேவையை துவங்கியுள்ளது.

இதனால் சில்லரைக்காக ஏற்படும் சிறு சிறு வாக்குவாதங்கள் தவிர்க்கப்படும் என்பதால் அதனை வரவேற்பதாக கருத்து தெரிவித்த பயணிகள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறுவதற்காக கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட வேண்டும் எனவும் சாதாரண பயண சீட்டு வழங்குமிடத்திலும் இந்த முறையை செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதே போல் மூத்த குடிமகன்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் செயல்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். தற்போது கோவை ரயில்நிலையத்தில் முன்பதிவு மையத்தில் உள்ள 10 கவுண்டர்களில் 4 மட்டுமே இயங்கி வருவதும் சாதாரண பயணச்சீட்டு வழங்குமிடத்தில் 3 கவுண்டர்கள் மட்டுமே இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...