கோவையில் தேசிய அளவிலான உற்பத்தியாளர் அபிவிருத்தி மற்றும் கண்காட்சி துவக்கம்


மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம், கோவை சிட்கோ தொழில்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்துடன் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான உற்பத்தியாளர் அபிவிருத்தி மற்றும் கண்காட்சி டிசம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பீளமேடு ஸ்ரீ பத்மாவதியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 



இதன் துவக்க விழா இன்று நடைபெற்ற நிலையில், மத்திய அரசின் காயர் போர்டு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.



இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தொழில் வளர்ச்சியில் நாம் வெற்றி பெறுவதற்கு சர்வதேச அளவில் தொழில் வளர்ச்சியை கொண்டு செல்ல வேண்டும். இந்தியா தொழில் வளர்ச்சியில் அதிக விருதுகளை பெற்றுள்ளது. அதில், எம்.எஸ்.எம்.இ மூலம் தமிழ்நாடு ஒன்பது விருதுகள் பெற்றுள்ளது. அதிலும் கோவை மாவட்டம் ஐந்து விருதுகள் பெற்று சிறந்து விளங்குகிறது. 

மேலும், ஏற்றுமதியில் சென்ற ஆண்டு ரூ.1,650 கோடி இருந்தது, இந்த வருடம் ரூ.2000 கோடியை எட்டியுள்ளது. மத்திய அரசு குறு, சிறு தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. குறிப்பாக நவீனமயமாக்குதலில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது'' இவ்வாறு அவர் தெரிவித்தார். 



இக்கண்காட்சியில், கோவை மற்றும் அதன் சுற்றுப்புறமுள்ள 80-க்கும் மேற்பட்ட தொழிலகங்கள் தங்களின் உற்பத்தித்திறனையும், தங்களிடம் உள்ள இயந்திர வசதிகளையும் பட்டியலிடுவதுடன் தங்களின் உற்பத்தித்திறனையும் வெளிப்படுத்த உள்ளனர். 

மேலும் தொழில்நுட்ப வசதிகள் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும் இந்த காலகட்டத்தில் நவீன தொழில் நுட்பங்களை உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்திட கோவையைச் சார்ந்த பல தொழில் கல்வி நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கிறது. 



இதில், கொடிசியா தலைவர் சுந்தரம், கொசிமா தலைவர் லோகநாதன், துணை தலைவர் சுருளிவேல், தெற்கு ரயில்வே தலைமை பட்டறை மேலாளர் பாஸ்கரன், எம்.எஸ்.எம்.இ கூடுதல் தொழில்துறை ஆலோசகர் சண்முகநாதன், மத்திய மாநில அரசு அதிகாரிகள், தொழில் முனைவோர் மற்றும் கல்வி நிறுவனங்களை சர்ந்தோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...