500, 1000 ரூபாய் நோட்டுகள் தடையால் தொடரும் மக்களின் சிரமங்கள்



மத்திய பாஜக அரசு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீர் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு மாறாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள பழைய தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாயினை மாற்றவும், புதிய ரூபாயினை பெறவும் பெருத்த சிரமத்தினை அன்றாடமும் சந்தித்து வருகின்றனர். 

வங்கிகளிலும், ஏடிஎம் மையங்ளிலும் போதிய பணம் இல்லாததால் பல ஏடிஎம் மையங்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. ஒரு சில ஏடிஎம் மட்டும் திறக்கப்பட்டிருந்தாலும் அதில் நூற்றுக்கணக்கான மக்கள் அலைமோதி வருகின்றனர்.

பொதுமக்கள், தங்களது அன்றாட செலவுகளுக்குக் கூட வழியில்லாமல், அலுவலகம் உள்ளிட்ட தங்களது பணிக்குச் செல்லாமல் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்கிழமை என அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் பணமின்றி மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து, இன்று வங்கி மற்றும் ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் ஏடிஎம் மையத்தில் குவிந்தனர்.





அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம், ரயில் நிலையம் அருகே உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலக வங்கியில் ஏராளமான மக்கள் காலை முதலே குவியத்துவங்கினர். வங்கி அலுவலகத்தின் உள்ளே ஏற்பட்ட கூட்டநெரிசலைத் தொடர்ந்து மக்கள் வரிசையாக அந்த வங்கியில் இருந்து சாலை வரையில் நின்று பணப்பரிவர்த்தனை செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...