மாநகராட்சி ஆணையர் உத்தரவால் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் வடக்கு மண்டலத்தில் உள்ள அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அந்த குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, வடக்கு மண்டலம், வார்டு எண்- 44, நல்லாம்பாளையம் சாலை, அன்னையப்பன் வீதியில் பிரியா குடிநீர் சப்ளை நிறுவனம் குடிநீர் திருடுவதாக ராமசாமி நகர் 2 குடியிருப்போர் நலச் சங்கத்தினர் புகார் மனு அளித்திருந்தனர்.

அதனடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் அப்பதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறைகேடாக அனுமதி பெறாமல் தண்ணீர் திருடிவருவது கண்டறியப்பட்டது.

மேலும், அந்த இடத்தில் ஆய்வு செய்யப்பட்டதில் என்.சண்முகம் என்பவர் இரண்டு குடிநீர் இணைப்புகளில் மோட்டர் பொருத்தி தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது உறுதியானதையடுத்து, வீட்டு உபயோகத்திற்காக இணைப்பு பெற்று வணிக நோக்கில் பயன்படுத்தியதால் இரண்டு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு, மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சாலையின் குறுக்கே குழாய் பதித்து குடிநீர் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்திய குழாயும் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...