பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மூலம் மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம்

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கி குறைந்த எண்ணிக்கையை கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவல்நிலைய தலைமை காவலர் உள்ளிட்ட இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்த நிலையில் அதற்கடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி கோவை அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது.

அதனடிப்படையில், அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்ட கோவை பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் முரளி, அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த பார் ஊழியரான சுரேஷ் என்பவரை பிடித்ததுடன் அவரிடமிருந்து சுமார் 1400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் 192 மது பாட்டில்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். 

இந்நிலையில், 1200 மது பாட்டில்களை ஆய்வாளர் பதுக்கியுள்ளதாக மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுக்கு புகார் வந்ததையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை வெளிப்படவே அவரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஒருவார காலமாக இது தொடர்பாக எவ்வித தகவலும் அளிக்காத பீளமேடு காவல்நிலைய உளவு பிரிவு தலைமை காவலர் சுப்பிரமணியமும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...