இடமாற்றம் செய்யப்படும் தனியார் நிறுவனத்தை கண்டித்து தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முற்றுகை


கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் டைமேக்ஸ்சன் டைமண்ட் செயற்கை வைரம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு பெரியநாய்க்கன்பாளையம் பகுதியில் 2 தொழிற்சாலைகளும் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் ஒன்றும் உள்ளது.

இதில், கண்ணம்பாளையத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த தொழிற்சாலை ஊழியர்கள் இனி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் பணிபுரியுமாறு ஆலை நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் இடமாற்றம் செய்யப்பட்டால் பணிபுரியும் அனைத்து குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், 30 முதல் 35 கிலோ மீட்டர் தூரம் அதிக பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலமையினை நிர்வாகம் உருவாக்குவதாகக் கூறி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஆலை நிர்வாகத்தினரை தொழிலாளர் நல அலுவலகம் அழைத்து இப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...