தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் குளோபல் கேர் சென்டர் திறப்பு விழா

உலகிலுள்ள வளர்ந்த நாடுகளை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. இத்தகைய காலகட்டத்தில் மக்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு அவசியமாகின்றது.

இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மாசுபட்ட இடத்தை சரிசெய்தலுக்கான சர்வதேச மாநாடு "இந்தியாவை தூய்மைப்படுத்தல் 2016" என்ற பெயரில் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவிலுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடுதல் மற்றும் மீட்டித்தலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையமும், நியூகாசில் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்துகின்றது.

இந்த மாநாட்டின் ஓர் அங்கமாக சர்வதேச சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடுதல் மற்றும் மீட்டித்தலுக்கான மையம் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படுகின்றது. சர்வதேச கூட்டமைப்பான இந்த மையம், ஒவ்வொரு தனிமனிதனையும், அரசாங்கத்தையும், அறிவியலையும், தொழில்துறை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளையும் வழிநடத்துவதோடு, ஒரு பாதுகாப்பான உலகத்தை உருவாக்கவும் உறுதுணையாக அமைகிறது. 

உலக அளவில் மாசுபாட்டைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளையும் வகுத்து, மாசு கலப்படத்தைத் தவிர்த்துப் பசுமை உற்பத்தி கோட்பாட்டினை மேம்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவர உள்ளது. 

இந்த மையத்தின் நோக்கமானது, மனிதனால் விளையும் மாசு கலப்படத்தினைக் குறைக்க, புதிய அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள, நவீன மதிப்பீட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்க, நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளையும் மேம்படுத்த, தலைசிறந்த வல்லுனர்களிடையே தகவல்களைப் பரிமாற்றம் செய்ய ஓர் உலகளாவிய இணையமாக விளங்குவதே ஆகும்.

மேலும், இந்த மையம் உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப அறிவுப் பகிர்விற்கு வழிவகுப்பதோடு மாணவர்களின் ஆய்வுகளுக்கும் தொழில் துறையின் மாசுபாட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பரிந்துரை செய்யவும் பயனுள்ளதாக அமையும். இந்த அமைப்பானது தூய்மைமிகு சர்வதேச இணக்க நிலையைத் தனிநபர், அரசாங்கம், தொழில்துறை, சமூக அமைப்புகள் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளிடையே உருவாக்கும்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...