கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை போத்தனூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பகாவி தலைமை தங்கினார். மாநில செயலாளர் அப்துல் சத்தார் வரவேற்றார்.



இக்கூட்டத்திற்கு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் ரபீக் அகமத், அஜ்மத் பாஷா, பொது செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீத், செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, ரத்தினம், எஸ்.டி.டி.யூ மாநிலத் தலைவர் முஹம்மது பாரூக், விம் மாநில தலைவி நஜிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு அதிமுக-விற்கும், தமிழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அதிமுக நிர்வாகிகளுக்கும், தமிழக மக்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்கொள்கிறது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பண மாற்று நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமளிக்க கூடாது. எஸ்.டி.பி.ஐ-யின் கட்சி வளர்ச்சி நிதி திரட்டப்பட உள்ளது. வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்பளிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...