பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியும் எப்.ஐ.சி.சி.ஐ-யும் இணைந்து பெண் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியும் பெண்கள் அமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ-யும் இணைந்து பெண் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வரும் 2017 ஜனவரி 3 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறும்.

இப்பயிற்சிக்கான ஏற்பாட்டில் என்.எஸ்.டி.இ.டி.பி, டி.எஸ்.டி மற்றும் இ.டி.ஐ ஆகியவையும் பங்கெடுத்துள்ளன. 25 நாட்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த பயிற்சியானது காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

இப்பயிற்சியில், தொழில்முனைவோர், தற்போதைய நிலை, தொழில் முனைவோர்களுக்கான நிதி ஆதாரங்கள், திட்டத்தினை தேர்ந்தெடுத்தல் மற்றும் தொழில்முனைவோர் திறன் மேம்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், சந்தைநிலை கண்டறிதல், தொழில் நிர்வாகம், பல்வேறு வரிகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இதில், 18 வயது 40 வயது வரை உள்ள பி.எஸ்சி, பி.டெக், பிஇ மற்றும் தொழில்நுட்ப பாடம் படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிபெற விருப்பமுள்ளவர்கள் தங்களது தகவல்களை [email protected] என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 9363104733, 9443760648, 9486710231, 9361333111, 9443338935 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி ஆகும்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...