வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு கோவை மாநகராட்சியின் சார்பில் துப்புரவாளர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பிவைப்பு

சென்னை மாநகரத்தை மையமாகக் கொண்டு வர்தா என்னும் புயல் திங்களன்று பலத்த காற்றுடன் வீசியது. இதில் மணிக்கு 130 முதல் 190 கிலோ மீட்டர் வேகம் வரை வர்தா புயல் காற்று வீசியதால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. மழையும் பெய்ததால் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதைத் தொடர்ந்து மக்கள் அரசு பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் கோவை மாநகராட்சியின் சார்பில் 150 துப்புரவு பணியாளர்கள் மற்றும் உணவு, உடை, துண்டு, போர்வை, சோப்பு, பற்பசை, தண்ணீர் பாட்டில்கள், ரொட்டி- ஜாம், பிஸ்கட் மற்றும் மருந்து மாத்திரைகள், காயத்திற்கான மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பிவைக்க முடிவுசெய்யப்பட்டது.

இதற்கு, கோவை மாநகர மக்கள் தங்களால் இயன்ற பொருட்களை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டதைத்தொடர்ந்து, திங்களன்று இரவு பல நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. 



இதைத்தொடர்ந்து, சென்னையில் வர்தா புயலால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை சரி செய்யும் விதமாக கோவை மாநகராட்சியின் சார்பில் 150 துப்புரவு பணியாளர்கள், 10 துப்புரவு பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் 2 துப்புரவு ஆய்வாளர்கள் ஆகியோர் போதிய பாதுகாப்பு உபகரணங்கள், தளவாட சாமான்களுடன் சென்னைக்கு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

முன்னதாக, அந்த வாகனங்களை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...