கல்லூரி பேராசிரியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

கோவை அரசு தொழில் நுட்பக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் சேகர். இவரது மனைவி ராணி. இவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 27 ம் தேதி திண்டிவனத்தில் உள்ள உறவினர் இறந்ததால் சேகர் தனது குடும்பத்தோடு திண்டிவனம் புறப்பட்டுசென்றார்.  

தொடர்ந்து, இன்று காலை சேகர் மட்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சேகர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.   

இது தொடர்பாக, சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் கை ரேகை நிபுணர்களின் உதவியோடு தகவல்களை சேகரித்தனர். 

 இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பல நாட்கள் நோட்டமிட்ட பின்னரே இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். 

அரசு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து 50 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியினரிடையே  பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...