கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண்ணால் பரபரப்பு


கோவை மலுமிச்சம்பட்டி செட்டிபாளையம் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஜான்சி ஜெலினா (35). இவரது கணவர் பிராங்க்ளின் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதியினருக்கு பியர்லின் (7) என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 1 ஆண்டு காலமாக தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வருமானம் இன்றி குடும்பம் நடத்த சிரமமாக உள்ளதால் தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கடந்த நவம்பர் 17ம் தேதியன்று போத்தனூர் காவல் நிலையத்தில் ஜான்சி புகார் அளித்துள்ளார். 

அதன் அடிப்படையில் விசாரணை செய்த காவல் துறையினர் இருவரையும் சேர்ந்து வாழ அறிவுறுத்தியது. இதையடுத்து, இரு நாட்களில் மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்வதாக பிராங்க்ளின் தெரிவித்துச் சென்றவர் திரும்பி வராததால் கணவர் தன்னை ஏமாற்றுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க ஜான்சி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். 

இந்நிலையில், மக்கள் குறை தீர்ப்பு நாள் ரத்து செய்யபட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்ததைத்தொடர்ந்து, வெளியே வந்த அவர் திடீரென்று சேலையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி காவல் நிலையதிற்கு அழைத்துச் சென்று அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...