துப்புரவு தொழிலாளியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை

கோவையில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் கனகராஜ். இவர் கடந்த சனிக்கிழமை கக்கன் நகர் பகுதியில் துப்புரவு பணி செய்து கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, மாரிமுத்து துப்புரவு தொழிலாளி கனகராஜினை தாக்கிதாக கூறப்படுகின்றது. இதில் காயமடைந்த கனகராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். ஆனால், இதுவரை கனகராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.



இந்நிலையில், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது துப்புரவு தொழிலாளி கனகராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கூட்டத்தினரை கலைந்துபோக சொல்லி காவல் துறையினர் எச்சரித்தும் அவர்கள் காவல் நிலையம் முன்பாக இருந்து போக மறுத்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...