லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலி


கோவை எல்&டி புறவழிச்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியானார்கள். ஒரு பெண் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை வெள்ளலூர்  பகுதியைச் சேர்ந்தவர் மதபோதகர் ஜீவா. இவரது மனைவி ஜெபா, ஒன்றரை வயது குழந்தை ஜெரோமியா ஆகியோருடன் இன்று பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற ஜீவா, மத பிரச்சாரங்களை முடித்துவிட்டு கோவை வெள்ளலூர் திரும்பினார். 

அப்போது சித்ரா என்ற உறவுக்கார பெண்ணையும் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கோவை திரும்பினார். கோவை எல்&டி புறவழிச்சாலை அருகே கஞ்சிகோணாம்பாளையம் என்ற பகுதி வழியாக வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது இவர்களது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஒன்றரை வயது குழந்தை ஜெரோமியா உள்ளிட்ட மூவரும் பலியானார்கள். சித்ரா என்ற பெண் மட்டும் பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து போத்தனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...