வர்தா புயல்; அரக்கோணத்தில் இருந்து சென்னை விரைந்துள்ளது பேரிடர் மீட்பு குழு

அதிதீவிர, 'வர்தா' புயல் சென்னை அருகே நாளை மதியம் கரையை கடக்க உள்ளதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழு சென்னை விரைந்துள்ளது. குறிப்பாக வட சென்னையில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், மகாபலிபுரம் பகுதிகளுக்கும் பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு குழுவிற்கு, 50 பேர் என, ஐந்து குழுக்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வங்க கடலில் உருவான, 'வர்தா' புயல், இன்று காலை, 5:30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து, 450 கி.மீ., தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல், தெற்கு ஆந்திரா மற்றும் சென்னை இடையே நாளை மதியம் கரையை கடக்க கூடும். அப்போது மணிக்கு, 70 கி.மீ., முதல், 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...