மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல்

கோவை, 48வது வார்டுக்குட்பட்ட ரத்தினபுரி 7வீதியில் திமுகவின் வட்ட செயலாளர் செல்வமணி என்பவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து அதிமுக வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




கோவை, ரத்தினபுரி பகுதியில் 48வது வார்டின் திமுகவின் வட்ட செயலாளராக பதவி வகித்து வருபவர் செல்வமணி. இவர் அண்மையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறித்து அவதூறாக பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி அதிமுக மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி நிதி குழு தலைவருமான பிரபாகரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட அதிமுக வினர் 48வது வட்ட திமுக அலுவலகம் முன்பாக போரட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திடீர் சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் மறைந்த ஜெயலலிதா குறித்து அவதூறு பேசிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வினர் ரத்தினபுரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...