மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த 17 லாரிகளை கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது



கோவையில் கடந்த அக்டோபர் மாதம் எட்டிமடையில் சிறை பிடிக்கப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த 20 வாகனங்களில் 17 வாகனங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன. கேரள மாநிலத்தை ஒட்டிய கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை அவ்வப்போது சிலர் சட்ட விரோதமாகக் கொட்டிச் செல்கின்றனர். இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி எட்டிமடையில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ, பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை அந்தப் பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.


இதுகுறித்து க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர், கழிவுகளைக் கொட்டித் தரம் பிரிக்கும் தொழிலில் ஈடுபட்ட முகமது இலியாஸ், சாஜி, சபீர் மற்றும் ஓட்டுநர்கள் உள்பட 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 24 பேரைக் கைது செய்த காவல் துறையினர், தலைமறைவாக உள்ள 3 பேரைத் தேடி வருகின்றனர். இந்த வழக்கு கோவை ஜெ.எம்.7 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கழிவுகளுடன் பிடிபட்ட வாகனங்களில் 17 வாகனங்களைத் திருப்பி அனுப்ப நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.


அதன் பேரில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 17 வாகனங்கள் கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பப்பட்டன. மீதமுள்ள வாகனங்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும்பட்சத்தில் அவையும் நீதிமன்ற உத்தரவுப்படி கேரளத்துக்கு விரைவில் திருப்பி அனுப்பப்படும் என்று க.க.சாவடி போலீஸார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...