மாருதி சுசூகி ஓலாவுடன் இணைந்து ஓட்டுநர் பயிற்சி அளிக்க புதிய திட்டம் ஒப்பந்தம்



மாருதி சுசூகி  இந்திய லிமிடெட் நிறுவனமும், ஓலா கால் டாக்சி நிறுவனமும் இணைந்து ஓட்டுநர்களுக்கான பயிற்சி அளிக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாருதி ஓலா பயிற்சி என்னும் இந்த திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் நபர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன் மூதற்கட்டமாக பெங்களூர், சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, மும்பை, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்த உள்ளது.

இதுகுறித்து, மாருதி சுசூகியின் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.கல்சி கூறியதாவது:-

மாருதி நிறுவனமானது சிறந்த முறையில் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்துகிறது. வாகனம் ஓட்டுவதில் உள்ள குறைபாடுகளால்தான் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இப்பயிற்சியில் பங்குபெறுவோருக்கு வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி சீராக செயல்படுவது உள்ளிட்டவையும் கற்றுத்தரப்பட உள்ளது.

இப்பயிற்சி 370 மாருதி ஓட்டுநர்கள் பள்ளி மூலம் வழங்கப்பட உள்ளது. நாங்கள் 40 ஆயிரம் ஓட்டுநர்களுக்கு 3 வருடத்தில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

ஓலாவின் முதன்மை செயல் அலுவலர் பிரனை ஜிவ்ராஜ்கா கூறியதாவது:-

மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது. அதனால், இத்துறையில் வளரும் சிறு தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளது. நாங்கள் மாருதி நிறுவனத்துடன் இணைந்து ஓட்டுநர்களை உருவாக்கப்போகிறோம்'' என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...