வாட்சப்பில் ஜெ.குறித்து வதந்தி கிளப்பிய வழக்கறிஞரை கைது செய்ய கோரி சமூக விழிப்புணர்வு இயக்கம் மனு

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்று தன்னை கூறிக்கொண்ட கிருஷண மூர்த்தி என்பவர், நேற்று ஜெயலலிதா குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாக குற்றம் சாட்டி, சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான சாக்ரடீஸ் இன்று கோவை மாநகர  காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.



இது குறித்து வழக்கறிஞர் சாக்ரடீஸ் கூறியதாவது :- 

தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்று சொல்லிக்கொண்டு கிருஷ்ண மூர்த்தி என்பவர் சமூக வலைதளங்கள்  மூலம் பொய்யான பிரச்சரத்தை  செய்துவருகிறார். இதனால், நீதிமன்றத்தில் நேற்று கலவரம் ஏற்பட நேர்ந்தது.

 மேலும் மன்னார் குடியில் வாழும் மக்களை மற்ற மக்கள் தவறாக எண்ணும் விதமாக அவரது பிரச்சாரம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் போலி டாக்டராக பணியாற்றி கைதுசெய்யப்பட்டர். 2009ல் மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்யாமல் வாதாடியதாக வழக்கு உள்ளது. மேலும், அவர்   சட்டக்கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் அதனால் அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருக்க வாய்ப்பே இல்லை. இது குறித்து விசாரணை நடத்தி  கிருஷ்ண மூர்த்தியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...