கோவையில் வசிக்கும் ஜெயலலிதாவின் பள்ளி தோழி பகிரும் நினைவுகள்!


மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் பள்ளியில் பயின்ற தோழி  கோவையில் உள்ளார். அவர் தனது பழைய நினைவுகளை கண்ணீர் மல்க கூறினார்.

மறைந்த முன்னாள் நடிகையும், பாடகியுமான யூ.ஆர்.ஜீவரத்தினம் அவர்களின் மூத்த மகள் அனுராதா. தற்போது 70 வயதாகும் அனுராதா ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்று கோவை இடிகரையில் வசித்து வருகிறார். 



இவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான பள்ளி வாழ்க்கை குறித்து  கூறியதாவது :- 

'நாங்கள் பிரசண்டேசன் கான்வெண்ட் சர்ச் பார்க் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். நல்ல குணம் படைத்தவர் ஜெயலலிதா. படிப்பிலும் அப்படித்தான்.பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில்  அவருடன்  சேர்ந்து நடனம் ஆடியுள்ளேன். எப்போதும் சைவ உணவு வகைகளையே உண்ணும் பழக்கம் உள்ளவர் அவர். 

10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற அவர் பி.யூ.சி படிப்புக்காக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அவரால் படிப்பை தொடரமுடியவில்லை. அவர் படங்களில் நடிக்க ஆரம்பித்த போது நான் என் குடும்பத்தோடு சென்று படங்களை பார்ப்பேன். 

பள்ளியில் என்னுடன் எப்படி பேசி பழகினாரோ படங்களிலும் அவ்வாறே தெரிந்தார். அவரது நடிப்புத்திறமையை பார்த்து வியந்து போவேன். ஜெயலலிதாவின் மறைவுச் செய்தியை அறிந்ததும் மிகவும் உடைந்து போனேன், ஈடுகட்ட முடியாத இழப்பு!'

 

ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் தனது சோகத்தை கண்ணீரால் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் நம் 'அம்மா'வின் தோழி, அனுராதா.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...