ஜெயலலிதா மரணத்தை அறிந்து அன்னூரில் தீக்குளித்த விவசாயி மரணம்!


தமிழக முதல்வர் கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதை தொடர்ந்த் தமிழகதில் உள்ள அ.இ.அ.தி.மு.க.  தொண்டர்கள் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தியும் மொட்டை அடித்தும், மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர் . 

இந்த நிலையில்,  கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்காவிற்குட்பட்ட ஆத்திகுட்டை பகுதியைச்சேர்ந்த அதிமுக வின் தீவிர விசுவாசியான விவசாயி ராமச்சந்திரன். ஜெயலலிதா இறந்த செய்தியை அறிந்து வீட்டின் வெளிப்புறத்தை பூட்டிவிட்டு சமையல் அறையில் இருந்த இரண்டு லிட்டர் மண்ணெண்ணெயை எடுத்துக் கொண்டு  ஊருக்குள் வந்து தனது உடலில் ஊற்றி , தீ பற்ற வைத்துக்கொண்டார். 

இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து தண்ணீரை எடுத்து  ராமச்சந்திரன் மீது ஊற்றி அவரை காப்பாற்றினர். இதை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தகவல் சொல்லப்பட்டது உடலில் 80 சதவீதத்திற்கு மேல் தீக்காயமடைந்த அவரை 108 அவசர ஊர்தி மூலம் அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். 

யாருமே வரவில்லை!

ஜெயலலிதா-வின் மரணச்செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்ற ராமச்சந்திரனை பார்க்க அக்கட்சியை சேர்ந்த ஒருவர் கூட வரவில்லை என்பது, ராமச்சந்திரனின் குடும்பத்தாருக்கு சொல்லிலடங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...