44 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்கிறதா ஈஷா?



கோவையை அடுத்த முட்டத்துவயல் என்ற  பகுதியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமாக 44.30 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடம் நில உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலமாக அறிவிக்கப்பட்டு கடந்த 1992ம் ஆண்டு பழங்குடி இன மக்கள் 46 பேருக்கு ஒப்படைக்கபட்டது. ஆனால், போலியான ஆவணங்களை தயாரித்த ஈஷா யோக மையம் அந்த நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ஈஷா அபகரித்ததாக கூறப்படும் 44.30 ஏக்கர் நிலத்தை மீட்டு தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை 15 நாட்களுக்குள் மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும், அந்த இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.



இந்த நிலையில், இன்று ஈஷா நிர்வாகத்தினர் இன்று 4 டிரேக்டர்களை கொண்டு அந்த நிலத்தை உழவு செய்தனர்.பேச்சுவார்த்தையில் இருக்கும் இடத்தை ஈஷா நிர்வாகம் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வது கண்டனுத்துக்கு உரியது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வுகான வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...