கோவையில் வங்கி ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே மோதல்


டவுன்ஹால் பகுதியில் உள்ள பெரியகடை வீதி கிளை  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளருக்கும், வங்கி ஊழியருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது. பிரதமர் மோடி 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என கடந்த மாதம் அறிவித்த நிலையில், வங்கியில் இன்றுவரை பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். 

இதன் விளைவாக, டவுன்ஹால் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு  ரூபாய் 2000 மட்டுமே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு டோக்கன் வழங்கப்பட்டு காலை முதல் மாலை வரை பொதுமக்கள்  வங்கியில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். 



இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் இதனை வங்கி ஊழியரிடம் கேட்கையில், அவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர், வங்கி ஊழியர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று அவர் கூறினார். மேலும், வங்கியில் காத்திருக்கும் நிலைமாற இரண்டு கவுண்டர் திறக்கவும், ரூபாய் 2000க்கும்மேல் பணம் வழங்கப்பட வேண்டும் என வாடிக்கையாளர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...