சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கண்காட்சி துவக்கம்

சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகம் சார்பில் எம்.எஸ்.எம்.இ எக்ஸ்போ 2016 என்னும்  கண்காட்சி கோவை மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் கோவை பிரிவு மற்றும் சிட்கோ தொழிற் பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் ஆகியவை இணைந்து டிசம்பர் 14 முதல் 16ம் தேதி வரை மூன்றுநாட்கள் கண்காட்சியினையும், வெண்டார் ஊக்குவிப்பு நிகழ்ச்சியினையும் நடத்தவுள்ளன.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பத்மாவதியம்மாள் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு தென்னைநார் கழக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதில், தொழில்முனைவோர் மத்தியில் மத்திய அரசின் கொள்முதல் கொள்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் தங்களது அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள தொழில்முனைவோர்களுடனான கருத்துக்களை பகிந்துகொள்ள வாய்ப்பாக இது அமையும்.

மொத்தம் 90 அரங்குகளாக அமைக்கப்படவுள்ள இக்கண்காட்சியில் மத்திய அரசின் ரயில்வேத் துறை, ராணுவத்துறை, மத்திய பொதுத்துறை நிறுவனங்களான பெல், பிஇஎம்எல், என்எல்சி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் இதில் பயனடையவுள்ளன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...