மறைந்த தமிழக முதல்வருக்கு குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் இதய அஞ்சலி

குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பாக மறைந்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுந்தராபுரம் தக்காளி  மார்க்கெட்  மைதானத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் தலைவர் தீபம் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



பின்னர், அவர் பேசுகையில்; தமிழகத்தில் 6 முறை முதல்வராக இருந்த ஒரே பெண்மணி ஜெயலலிதா, அவர் மறைந்தது தமிழக மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக கட்சியின் தொண்டர்கள் கண்ணீர் கடலில் வீழ்ந்துள்ளனர். குறிச்சி குளம் இயக்கம் சார்பில் தண்ணீருக்கு பல்வேறு செயல்கள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் தண்ணீர்க்காக மழை நீர் சேமிப்பு திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டார். மேலும் முல்லை பெரியார், காவேரி போன்ற தண்ணீர் பிரச்சனைகளுக்கு பல்வேறு வழக்குகள், கடிதங்கள் மூலமாகவும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க செய்தார். இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்றும் அவர் குறிப்பிட்டார்.



பின்னர், மறைந்த தமிழக முதல்வருக்கு 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர்கள் மணிகண்டன், கனகராஜ், ஆறுமுகம் துணை தலைவர் சுரேஷ், விவசாயிகள் சங்கம் வலுக்கு பாறை பாலு மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...