கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாப பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லவாடி பகுதியை சேர்ந்தவர் சூரியன் (21). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். இந்த நிலையில் நேற்று, இவர் தனது நண்பர்களான இளங்கோ மற்றும் கவுசிக் என்ற இருவருடன் இருசக்கர வாகனத்தில் கொடிசியா நோக்கி சென்றார். அப்போது அவிநாசி சாலையில் வந்த கார் சூரியன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மூவரும் தூக்கியெறியப்பட்டனர். படுகாயம் அடைந்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அவர்கள் வந்த வாகனம் தீப்பிடித்தது. சம்பவம் அறிந்து வந்த பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின்னர், மாணவர்களின் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். தொடர்ந்து காரை ஓட்டிவந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பரத் (26) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...