முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலக்குறைவு எதிரொலி: கோவையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென 'கார்டியாக் அரஸ்ட்' ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உட்பட முக்கிய நகரங்களில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கோவையில் நள்ளிரவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. பல பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. நள்ளிரவே மக்கள் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர். 

இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. கோவை காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் இயல்பாக இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...