மகனிடம் தாயை சேர்த்த ஈர நெஞ்சம் !


கடந்த ஏப்ரல் 4ம் தேதி ஆந்திராவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயிலில் இருந்து இறங்கியவர் சுப்பம்மாள். ஆந்திர மாநிலம் பொன்னூர் பகுதியை சேர்ந்த இந்த மூதாட்டி, ரயில் பிரயாணத்தின்போது தவறுதலாக குடும்பத்தினரை பிரிந்து கோவை வந்தார். புரியாத மொழி, புதுப்புது மனிதர்கள், கூட்ட நெரிசல் என்று விழி பிதுங்கி நின்றார் சுப்பம்மாள். இது குறித்து தகவலறிந்த, கோவை ஈர நெஞ்சம் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் ரயில் நிலையம் சென்று அந்த மூதாட்டியை மீட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு அழைத்துச் சென்றனர். 



தொடர்ந்து சுப்பம்மாளிடம் பேசி அவர் ஊர், பெயரை பெற்ற ஈர நெஞ்சம் மகேந்திரன், சுப்பம்மாளின் குடும்பத்தினர் குறித்த விவரங்களை சேகரித்தார்.முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுப்பம்மாளின் புகைப்படத்துடன் அவர் தற்போது இருக்கும் முகவரியை சேர்த்து பதிவு செய்தார். 

இந்த தகவல் ஹைதராபாத்தில் உள்ள சுப்பம்மாளின் மகன் ராமாராவ் என்பவருக்கு கிடைக்கவே, இன்று கோவை வந்த அவர் ஈர நெஞ்சம் அறக்கட்டளையில் தங்கியிருந்த தாயை சந்தித்தார். மகன் வந்ததையறிந்த சுப்பம்மாள் ராமாராவை கட்டி அழுத காட்சி காண்பவர்  நெஞ்சை கசிய வைத்தது. தொடர்ந்து இன்று சுப்பம்மாள் தனது மகனுடன் ஆந்திரா சென்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...