மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் - கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் .


உலகம் முழுவதும் இன்று மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அளிக்க  தமிழக அரசு ஓவ்வொரு ஆரம்ப சுகாதார நிலத்திலும் குறைந்த பட்சம் ஒரு பிசியோதெரபி மருத்துவரை நியமிக்க வேண்டும். 

கடந்த 2011 ஆண்டு மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 5,436,604 பேரும் இதில் தமிழகத்தில் 287241 பேரும் கை, கால் இழப்பு அல்லது செயலிழப்பினால் உடல் ஊனம் அடைந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதில் பிறக்கும் போதே ஏற்படும் உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம். பிறப்பு ஊனத்தை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து அவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பதன் மூலமாக குணப்படுத்த முடியும். அதேபோல் விபத்தினால் ஏற்படும் மூளை பாதிப்பு, முதுகு தண்டுவட பாதிப்பு, கை மற்றும் கால் இழப்பு போன்றவற்றால் ஏற்படும் உடல் ஊனத்தையும் பிசியோதெரபி மருத்துவதின் மூலம் அவர்களின் மாற்று திறனை மேம்படுத்தி மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கையை வாழ செய்ய முடியும். இவ்வாறு மாற்று திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவர்களை ஓவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிளும் நியமிப்பதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். 

பிறப்பு ஊனத்தை தடுக்க தமிழக அரசு பொது மக்களிடம் ஊனத்திற்கான காரணம் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் பிசியோதெரபி மருத்துவர்கள் தலைமையில் மறுவாழ்வு மையம் அமைக்க படவேண்டும்.

மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு திறமைகளை ஊக்கபடுத்த அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுதிறனாளிகளுக்கான தனி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.அதில் மாற்றுத் திறனாளிகளை அவர்கள் விரும்பும்  விளையாட்டுக்கு ஏற்றால் போல் உடலை தகுதி படுத்த பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். 

இதன் மூலம் கடந்த ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற திரு.மாரியப்பன் அவர்களை போன்ற  சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். இவ்வாறு கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர். ராஜேஸ் கண்ணா கூறியுள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...