கோவை மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கு

கோவை: அரசுக் கலைக்கல்லூரியில்  கோவை மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கு இரண்டு நாள் கருத்தரங்கு இன்று தொடங்கியது. கருத்தரங்கு நிகழ்ச்சியை கோவை வருவாய் கோட்டாசியர் அலுவலர் மதுராந்தகி துவங்கி வைத்தார். தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அன்புச்செழியன் வரவேற்புரை  வழங்கினார். 
 


இந்நிகழ்ச்சி, அரசு அலுவலர்கள் எல்லா நடைமுறைகளிலும் தமிழ்மொழியை  கடைபிடிக்கும் வகையில் சட்டம் மற்றும் அதன் அடிபடையில் இந்த ஆலோசனை கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலர்களுக்கு இந்த தமிழ்மொழிப் பயிலரங்கு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 



மேலும், இன்று நடைபெறும் பயிலரங்கில் அரசு அலுவலர்களுக்கான அரசு ஆணைகள், அலுவலக குறிப்புகள், ஆட்சி மொழி சட்டம் வரலாறு, வரைவுகள் மற்றும்  செய்முறை ஆணைகள் தயாரித்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் இப்பயிலரங்கு நடைபெறுகிறது. இரண்டாம் நாளன்று நிறைவு விழா நடைபெறும். இவ் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளவுள்ளார். 
 
இந்நிகழ்ச்சியில், அகரமுதலித் திட்ட இயக்குநர் (பொ) மற்றும் சேலம் மண்டலத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் செழியன், திருச்சிராப்பள்ளி தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் துரை.தம்புசாமி, தூத்துக்குடி தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் சிவசாமி மற்றும் 200க்கும் மேற்பட்ட கோவை மண்டல பல துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...