ஓய்வூதியதாரார்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஓய்வூதியதாரார்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. 



 அதில், 2016ம் ஆண்டில் அமல்படுத்தும் வகையில் 8வது ஊதியக்குழுவை அமைத்தல், வல்லுநர் குழு அறிக்கையை  உடனடியாக வெளியிடுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்தல், முதல்வர் மற்றும் நிதியமைச்சர் ஆகியவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அடையாள அட்டையை வழங்குதல், இராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு இரட்டை குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பாடு மறுக்கப்படும் நிலையில், கட்டாய ஓய்வூதியம் பிடித்தம் செய்வதிலிருந்து விலக்களித்து திட்டத்திலிருந்து விலகுவதற்கு அனுமதி அளித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதில், கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ரங்கராஜ், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் ராஜேஸ்வரன், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...