தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என குற்றம்சாட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாமல் அவசர கோலத்தில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும், பணப் பிரச்சனை 50 நாட்களில் தீர வாய்ப்பில்லை. பணப்புழக்கம் சீரடைய 7 மாதங்கள் ஆகும் என்றார்.

மேலும், பண விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச ஏன் பயப்படுகிறார் என கேள்வி எழுப்பிய அவர், ஜனநாயகத்தை மதித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார். சாதாரன மக்கள் பிரச்சனையை என்னிப் பார்க்காமல் கருப்பு பணத்தை ஒழித்து விட்டோம் என்பது வேடிக்கையானது.

பணம் எடுப்பதற்கு தினம்தினம் புதிய உத்தரவுகளை பிறப்பித்து மத்திய அரசு மக்களை குழப்பி வருகிறது. புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அவசியம் அற்றது. இந்த தாள்கள் கருப்பு பணம் பதுக்கலை மேலும் எளிதாக்கும். புதிய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களை அதிகளவில் புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். 

இதைத்தொடர்ந்து, பயிர்கள் கருகுவதை பார்த்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும் என்றார். 

மேலும், தமிழகத்தில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...