சொத்துவரி செலுத்தாத தொழிற்சாலையின் முன்பு குப்பைத்தொட்டி வைத்து மாநகராட்சி நடவடிக்கை

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி ராஜராஜேஸ்வரி நகரில் வசிக்கும் ராஜாராம் என்பவர் சொத்துவரி செலுத்தாதைத் தொடர்ந்து அவரது தொழிற்சாலையின் முன்புறம் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மண்டலம் வார்டு எண் 76, ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வரும் ராஜாராம், என்பவர் வரிவிதிப்பு எண் - 76136004, 2016- 17-ம் ஆண்டு சொத்து வரி நிலுவை ரூ.15 ஆயிரத்து 980 மற்றும் வரிவிதிப்பு எண் - 76136005, 2016- 17-ம் ஆண்டு சொத்து வரி நிலுவை ரூ.9 ஆயிரத்து 196 என மொத்தம் 25 ஆயிரத்து 176 ரூபாய் சொத்துவரி நிலுவைத் தொகையினை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அவரது தொழிற்சாலையின் முன்பு குப்பைத் தொட்டி வைக்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவரது தொழிற்சாலையின் முன்புறம் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...