கோவையில் அரசு உத்தரவுப்படி மூடப்பட்ட பள்ளிகள் தற்போது அனுமதியின்றி செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் புகார்

கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசின் முறையான அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும், அவ்வாறு செயல்படும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டும் தற்போது எவ்வித உத்தரவுமின்றி செயல்படுவதாகவும் கூறி கோவை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரஃபி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

அனுமதி பெறாததாலும், முறையான கட்டமைப்பு இல்லாததாலும், முறைப்படி அனுமதியினை புதுப்பிக்காததாலும் தமிழக அரசு உத்தரவுப்படி அன்றைய கோவை மாவட்ட ஆட்சியராக செயல்பட்ட கருணாகரன் பல பள்ளிகளை மூட உத்தரவிட்டார். 

இருப்பினும் தற்போது அந்த பள்ளிகள் எவ்வித அனுமதியும் இன்றி செயல்பட்டு வருகிறது. இது மாவட்டக் கல்வித் துறைக்கு தெரிந்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. பெற்றோர்களும் இதுகுறித்து அறியாமல் தங்களது குழுந்தைகளை அந்த பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். பள்ளி நிர்வாகம் ஆயிரக்கணக்கான ரூபாயினை பெற்றோர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு முறைப்படி அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு அனுமதி புதுப்பித்தல், ஆய்வகம், கழிப்பறை, சுற்றுச் சுவர் போன்ற அடிப்படை வசதிகள் முறைப்படி உள்ளனவா ? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அனுமதி பெற்ற பள்ளிகள் தங்களது அங்கீகாரம் பற்றிய அனுமதிக் கடிதத்தை தகவல் பலகையில் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில் அமைக்க வேண்டும்.

கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் பல பள்ளிகளில் இட ஒதுக்கீடுகள்  செய்யப்படுவதில்லை. அதனை ஆய்வு செய்து இடஒதுக்கீட்டினை உறுதிசெய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமிராவினை பொருத்த காட்டாயப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...