சிறுமுகை வனப்பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழந்தது குறித்து அதிகாரிகள் ஆய்வு

சிறுமுகை வனப்பகுதிக்கு உட்பட்ட அலத்திவட்சினாம்பாளையம் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக வன அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற சிறுமுகை வனச்சரகர் மனோகரன் மற்றும் மாவட்ட வன அலுவலர், கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த யானையினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து வன அதிகாரிகள் கூறுகையில், தற்போது உயிரிழந்துள்ள இந்த பெண் யானைக்கு சுமார் 20 வயது இருக்கும். இறந்து 2 முதல் 3 நாட்கள் கடந்துள்ளது. தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. உடல் நலக் குறைவால் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...