500, 1000 ரூபாய் நோட்டு தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலினை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததைக் கண்டித்து திங்களன்று (இன்று) நாடு தழுவிய அளவில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன. இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலினை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவை அரசு பொது மருத்துவமனை முன்பு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.









இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...