கோவையில் சேவல் சண்டை நடத்திய மூவர் கைது

கோவை ஆனைமலை யை அடுத்த களத்துப்புதூர் ரயிவே கேட் அருகே உள்ள மைதானம் ஒன்றில் சேவல் சண்டை நடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து , உதவி ஆய்வாளர் செல்வ நாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

அப்போது அங்கு  மூவர் சேவல் சண்டை நடத்திக்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் வருவதை கண்ட அவர்கள் தப்பியோட முயன்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை விரட்டிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஜோதீஷ்குமார் (33), முத்துசாமி(30) மற்றும் ஆனைமலையை சேர்ந்த  துரையப்பன் (42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் , சண்டைக்கு பயன்படுத்திய 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...