காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள ஏடிஎம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதிலும், புதிய ரூபாயினை பெருவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதிலும் தாமதம் நிலவி வருகிறது. வங்கிகளிலும் நாள் ஒன்றுக்கு அதிகப்படியாக 2000 ரூபாய் மட்டுமே பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியிலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் போதிய பணம் இல்லாததால் மக்கள் அன்றாட செலவுகளுக்கு கூட பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, கோவை மாநகர காவல் துறை ஆணையத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காவல் துறை ஆணையர் ஏ.அமல்ராஜ் தற்போது அனுமதி வழங்கியுள்ளார்.

கோவை மாநகர காவல் துறை ஆணையரின் இந்த மனிதநேயமிக்க அறிவிப்பு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும், அவரது இந்த சமூகத்தின் மீதான அக்கரைக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...