கோவை அரசு பொது மருத்துவமனையில் இருதய மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை விரைவில் துவங்கப்படும்

கோவை அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் சிறுநீரக பிரிவு, இருதய சிகிச்சை பிரிவில் கூடியவிரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை முறை துவங்கப்படும் என அம்மருத்துவமனையின் டீன் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:-

கோவை அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை துவங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த விண்ணப்பம் சென்னை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது ஆய்வில் உள்ளது. அங்கிருந்து அனுமதி வந்தவுடன் மேற்குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகள் துவங்கப்பட்டு விடும். டிசம்பர் மாதம் இறுதிக்குள் அனுமதி வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. 

தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று, இருதய சிகிச்சைகளுக்கு குறைந்தது சுமார் 3.5 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக துவங்கப்படும் இந்த சிகிச்சை மூலம் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து ஏழை, எழிய மக்கள் மிகுந்த பயனடைவர். 

சிகிச்சைக்கான பயனாளர்கள் குறித்தும் பெயர் தேர்வு செய்யப்பட்டு தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு முடிந்து சென்னையில் இருந்து நிதி வந்தவுடன் அறுவை சிகிச்சை துவங்கப்படும்'' என கோவை அரசு பொது மருத்துவமனை டீன் எட்வின் ஜோ தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...