கோவை மதுக்கரையில் ரயில் மோதி ஆண் காட்டு யானை பலி


கேரளாவிற்கு உட்பட்ட பாலக்காடு வாளையாறு வனப்பகுதியிலும் இதையொட்டியுள்ள கோவை மாவட்டத்தின் மதுக்கரை வனப்பகுதியிலும் காட்டுயானைகள் அதிகளவில் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக செல்லும் தமிழகம் - கேரளம் இடையிலான ரயில்பாதையே, யானைகள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் ரயிலில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை சுமார் 7.05 மணியளவில் பாலக்காட்டிலிருந்து வாளையாறு, மதுக்கரை வழியாக கோவை நோக்கி பயணிகள் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது வாளையாறு வனப்பகுதியில் உள்ள வட்டக்காடு என்ற இடத்தில் யானைகள் கூட்டம் ரயில் பாதையை கடந்து செல்ல முயன்றது. இதனிடையே, ரயில் வேகமாக வந்து கொண்டிருந்ததால், கடைசியாக வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று எதிர்பாராத வகையில் ரயிலில் சிக்கியது. 



ரயிலின் என்ஜின் மோதியதில் பலத்த காயமடைந்த யானை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை உயிரிழந்தது குறித்து ரயில்வே அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், கேரள வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். விபத்து நடைபெற்ற இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, அடக்கம் செய்யப்படும் என வனத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

யானைகள் இறப்பைத் தடுக்க மதுக்கரை - வாளையாறு வனப்பகுதியில் மணிக்கு 30 கி.மீ வேகத்துக்கும் குறைவாகவே ரயிலை இயக்க வேண்டுமென தமிழக, கேரள வனத்துறையினர் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திடன் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது அந்த வேகக் கட்டுப்பாடு மீறப்படுவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மதுக்கரை - வாளையாறு இடையேயான வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களில் இதுவரை 4 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...