கார் மீது பேருந்து மோதிய விபத்தில் கோவையைச் சேர்ந்த மூன்று பேர் பலி


கோவையைச் சேர்ந்த நண்பர்கள் 12 பேர் உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக மூன்று கார்களில் கோவையில் இருந்து சனிக்கிழமையன்று புறப்பட்டுள்ளனர். இவர்களது கார் அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி காபி ஒர்க்ஸ் என்ற இடத்தின் அருகே இரவு 12.30 மணியளவில் சென்று கொண்டிருந்துள்ளது.

அப்போது, கேரளாவில் இருந்து உதகைக்கு சென்றுவிட்டு மேட்டுப்பாளையம் வழியாக கேரளாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து, இவர்களது ஒரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், காரில் பயணம் செய்து கொண்டிருந்த கோவையைச் சேர்ந்த முத்து (21), வினித் (22), கரண் (21) ஆகிய மூன்று வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்திற்குள்ளான காரில் இருந்த மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...