இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணா அவர்களுக்கு கோவையில் பாராட்டு விழா!

கோவை: ஆர்.எஸ் புரம் பாரதீய வித்யாபவன் பள்ளி கலையரங்கில் இன்று மாலை 6 மணியளவில் கர்நாடக இசையில் மகசேசே விருது பெற்ற இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர்(சிஐஐ) மற்றும் அத்வைத் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவி சாம் வரவேற்புரை வழங்கினார்.



நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கலந்து கொண்டார். 

பின்னர், அவர் பேசுகையில், 'டி. எம் கிருஷ்ணா இசைக்கலைஞர் குடும்பத்திலிருந்து சிறு வயது முதலே கர்நாடக இசை ஞானம் பெற்ற கலைஞர். புகழ்பெற்ற மறைந்த செம்மங்குடி ஸ்ரீ நிவாச அய்யரிடம் ஏழு வருடங்களுக்கு மேல் சிறப்பு பயிற்சி பெற்றவர். 



இவருடைய முதல் சங்கீத நிகழ்ச்சி 12 வயதிலே தொடக்கி பல உயரங்களை கடந்து இன்று சிகரம் தொட்டது. இன்று இவருடைய இந்த மகசேசே விருது அவருடைய இசைக்கலைஞர் மாகுடத்தை உலகரியச் செய்தது' எனக் கூறினார்.

பின்னர், இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணனுக்கு, மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி பாராட்டி விருதினை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியினை, தென்னிந்திய கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளை, பாரதீய வித்யாபவன், ராஜலட்சுமி கலை நிறுவனம், மனோரஞ்சிதம் (அய்யப்பன் பூஜா சங்கம்), கோவை இசை சங்கம் மற்றும் அவியாசம் முதலிய நிறுவனங்கள் இணைத்து வழங்கின.

இதில், கர்நாடக வயலின் இசைக்கலைஞர் வித்வான் ஸ்ரீ ராம்குமார், இசைக்கலைஞர்கள் சுகுமார், நாகசுந்தரம், சிவகிருஷ்ணன், சந்திரசேகர் பகவதி, சிவராம குமார் மற்றும் பொது மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

⁠⁠⁠⁠

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...