வீடியோ கேம் பிரியர்களை கவர்ந்த ''மகாயுத்''

கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள வீடியோ கேம் விளையாட்டுப் பிரியர்களை கவரும் வகையிலும், அவர்களது மத்தியில் விளையாட்டினை ஊக்கப்படுத்தும் வகையிலும் கேம்மிங் பிரீமியர் லீக் ''மகாயுத்'' என்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுப் போட்டிக்கு டெக் ப்ரேக்த்ரோ முதன்மை நிரைவேற்று அதிகாரி விஷால் வெங்கடேசன் ஏற்பாடு செய்திருந்தார். 



இதுகுறித்து, விஷால் வெங்கடேசன் நமது நிருபரிடம் கூறியதாவது:-

வார விடுமுறையினை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விளையாட்டுப் போட்டி துவங்கப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்துவதே எங்களது நோக்கம். 

''மகாயுத்'' விளையாட்டில் மொத்தம் 40 குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கிடையே போர் போன்ற போட்டிகள் பெரிய திரையில் நடைபெறும். கவுண்டர் ஸ்ட்ரைக் குலோபல் (Counter Strike Global Offence) என்ற இந்த விளையாட்டு பெரும்பாலும் ஐடி நிறுவனத்தினரையே ஈர்த்துள்ளது. 



இந்த விளையாட்டில் நீக்கமும் உள்ளது. போட்டியின் முடிவில் குறைந்த இலக்கை அடைந்தவர்கள் நீக்கப்படுவர். வெற்றி பெற்றவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி அடைவர். இதன் இறுதிச் சுற்று நாளை (செவ்வாய்) நடைபெற உள்ளது. இதில் வெற்றியடைவோருக்கு 75 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, மகாயுத் விளையாட்டு அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் ஸ்டாலும் அமைக்கப்பட்டுள்ளது. இது, அந்த நிறுவனங்களுக்கு பயனுள்ள விளம்பரமாகவும் உள்ளது. அதில், 3டி-யில் வரைதல், ஆட்டோமேஷன் சென்சார் செயலி உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த விளையாட்டு நிகழ்ச்சி சிறப்பான முறையில் உள்ளது. பல்வேறு மன சோர்வுகளில் இருந்து மக்கள் மீண்டுவர இது பயனுள்ளதாக அமைந்தது என விஷால் வெங்கடேசன் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...